Thursday 2nd of May 2024 12:09:28 AM GMT

LANGUAGE - TAMIL
.
அரிசி ஆலை பணியின் போது தவறிவிழுந்து குடும்பஸ்தர் பலி: கிளிநொச்சியில் துயரம்!

அரிசி ஆலை பணியின் போது தவறிவிழுந்து குடும்பஸ்தர் பலி: கிளிநொச்சியில் துயரம்!


அரிசி ஆலையில் பொருத்து வேலைகளில் ஈடுபட்டிருந்த போது தவறி விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கிளிநொச்சியில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றின் அலுமினிய பொருத்து வேலைகளுக்காக மட்டகளப்பில் இருந்து வந்திருந்த 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் பொதுச்சந்தை பின்புற வீதியில் அமைந்துள்ள குறித்த அரிசி ஆலையில் அலுமினிய பொருத்து வேலைகளுக்காக வந்திருந்த குறித்த குடும்பஸ்தர் நெல் பதப்படுத்தும் தொட்டி பொருத்து வேலை முடித்து கீழே இறங்க முயற்சித்தபோதே தவறி விழுந்துள்ளார்.

தவறி விழுந்ததை அவதானித்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும் அவர் சிகச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த நபர் நான்கு பிள்ளைகளின் தந்தை எனவும் இவர் மட்டகளப்பை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்த நபர் 54 வயதுடைய இராமையா விஜயரத்தினம் எனவும் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE